தண்டையார்பேட்டை பகுதியில் தாத்தாவிடம் பேரன் தகராறு செய்த போது, தடுக்க வந்த தாத்தாவின் நண்பரை பீர்பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிய பேரன் கைது.

சென்னை, தண்டையார் பேட்டை, பி.பி.அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் ராஜா, வ/42, த/பெ. முனுசாமி என்பவர் நேற்று (21.12.2021) மாலை சுமார் 06.00 மணியளவில், வீட்டினருகே அவரது வீட்டு உரிமையாளர் சின்னசாமி என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த சின்னசாமியின் பேரன் அன்பரசன் என்பவர் தாத்தா சின்னசாமியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சின்னசாமியை அடிக்க வந்த அன்பரசனை ராஜா தடுத்தார். உடனே, அன்பரசன் அருகிலிருந்த பீர்பாட்டிலை எடுத்து, ராஜாவின் தலையில் தாக்கி இரத்தக்காயம் ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றார். சத்தம் கேட்டு சின்னசாமி மற்றும் அருகிலிருந்தவர்கள் ராஜாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததின் பேரில், ராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 மேலும், இது தொடர்பாக ராஜா கொடுத்த புகாரின் பேரில், H-3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, புகார் தாரரை பீர்பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற அன்பரசன், வ/23, த/பெ.ஓம்பிரகாஷ், தண்டையார்நகர் மெயின் ரோடு, தண்டையார்பேட்டை என்பவரை கைது செய்தனர். விசாரணையில் எதிரி அன்பரசன் மீது H-3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு அடிதடி வழக்கு உள்ளது தெரிய வந்தது.    கைது செய்யப்பட்ட அன்பரசன் விசாரணைக்குப் பின்னர் இன்று (22.12.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »