சோளங்குருணி கிராமத்தில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமன்று ஒலிபெருக்கி மூலம் அறிவுரை…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட சோளங்குருணி கிராமத்தில் ரவி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். சமூக ஆர்வலரும் தன்னார்வலருமான ரவி கொரானா முதல் மற்றும் இரண்டாம் அலையின்போதே தனது சொந்த வாகனத்தில் சொந்த முயற்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கபசுர குடிநீர் வழங்கியும், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்திவந்தார்.

தொடர்ந்து கொரானா வைரஸை ஒழிக்க தடுப்பூசி செலுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில் ரவி என்பவர் தனது வாகனத்தில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமன்று ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறார். இந்த கொரானா காலத்திலும் தொடர்ந்தது சேவையாற்றி வரும் ரவி-க்கு காவல்துறை பல்வேறு விதமான விருதுகளை ஊக்கப்படுத்தி வருவதோடு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »