சைதாப்பேட்டை பகுதியில் நின்றிருந்த நபரிடம் செல்போன் திருடிச் சென்ற சரித்திர பதிவேடு குற்றவாளி கைது. 1 செல்போன் பறிமுதல் 

சென்னை, ஜாபர்கான்பேட்டை, கண்ணியப்பன் தெருவில் வசித்து வரும் சரண், வ/20, த/பெ.மோகன் என்பவர் மதியம், கிழக்கு சைதாப்பேட்டை, சாரதி நகர் சந்திப்பில் நின்றிருந்த போது, பின்பக்கம் வந்த ஒரு நபர் சரண் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போனை திருடிக் கொண்டு தப்பியோடினார். சரண் அந்த நபரை பிடிக்க ஓடிச் சென்ற போது, அந்த நபர் தப்பி விட்டார். உடனே, சரண் இது குறித்து, J-1 சைதாப் பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

J-1 சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தும், புகார்தாரர் கூறிய எதிரியின் அடையாளங்களை வைத்தும், மேற்படி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட முனிஷ் (எ) கால்சா, வ/21, த/பெ.ரமேஷ், நெருப்புமேடு, ஆலந்தூர் ரோடு, சைதாப்பேட்டை என்பவரை சில மணி நேரத்தில் கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், எதிரி முனிஷ் (எ) கால்சா என்பவர் J-1 சைதாப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது சுமார் 3 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட எதிரி முனிஷ் (எ) கால்சா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »