செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊனைமாஞ்சேரியில் ச.இராசேந்திரன் இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு..

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊனைமாஞ்சேரியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியம் ஊனைமாஞ்சேரியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் மற்றும் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.கஜா (எ) கஜேந்திரன் ஆகியோர் கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்குகளை சேகரித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 4வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் எம்.கஜா(எ)கஜேந்திரன் மற்றும் காட்டாங்கொளத்தூர்  ஒன்றிய 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் யூ.சி.எல்.பிரபாகரன் ஆகியோரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்த ஜீப்பில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


இதில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் க.விஜயசங்கர், மாவட்ட தலைவர் பி.ஆர்.எஸ்.சரவணராஜ்,கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.குப்புசாமி,நகரக் கழக செயலாளர்கள் எம்.நடராஜன், ஆர்.எஸ்.சுபாஷ்,கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட இணைச்செயலாளர் வி.லலித் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் வி.வினோத்குமார், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள்,ரவி,ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »