செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் பெண்கள் அதிக ஆர்வமுடன் விருப்ப மனு தாக்கல்…

செங்கல்பட்டு – தமிழகத்தில்   புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
 செங்கல்பட்டு  மாவட்டம் மாமண்டூர் பகுதியில் செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக கழகத்தினர் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை தேர்தல் பொறுப்பாளர்கள் கழக மகளிரணி செயலாளர் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்  க.பாண்டியராஜன், மாவட்ட கழக செயலாளர்கள்  சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோரிடம் அளித்தனர். கழக மகளிர் அணி இணைசெயலாளரும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினருமான மரகதம் குமரவேல் உள்ளிட்டமாவட்ட, ஒன்றிய, நகர , கிளை கழக உடன் இருந்தனர்.


செங்கல்பட்டு மாவட்டத்தில் பரங்கிமலை, காட்டாங்குளத்தூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், இலத்தூர், சித்தாமூர், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்டு நடைபெறும் இந்தத் தேர்தலில் மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவிகளுக்குப் போட்டியிட பெண்கள் அதிக ஆர்வமுடன் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »