சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி பிறந்த நாள் விழா.

முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 104வது பிறந்த நாள் விழா,
சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி எஸ் அய்யப்பன்  தலைமை வகித்தார்.   விருதுநகர் மாவட்ட செயலாளர் சந்திரன், சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக், நகர துணைத்தலைவர் சேதுராமலிங்கம், லட்டு கருப்பசாமி, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அன்னை இந்திரா காந்தியின் திருவுருவ படத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது சாத்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ் இந்திராகாந்தி புகழ் ஓங்குக என்று கோஷமிட்டார் .அவரை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகளும் கோஷமிட்டனர்.

சாத்தூர் நகர துணைத் தலைவர்கள்  சின்னப்பன், ஜெயபாலன், வெள்ளைச்சாமி கிருஷ்ணன், வட்டார துணைத்தலைவர் ஒத்தையால் முத்துவேல், நகரச் செயலாளர் ஆட்டோ ராஜ்குமார் லட்சுமணன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதாம் உசேன், ஒன்றிய மாணவரணி தலைவர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »