கொருக்குப்பேட்டை பகுதியில் மனைவியிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கிய கணவர் கைது.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, பரசுராமன் மெயின் தெரு, எண்.103 என்ற முகவரியில் வசிக்கும் வகிதாபேகம், வ/24, க/பெ.முஸ்தபா (எ) சதாம் என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வகிதாபேகத்திற்கும் அவரது கணவர் முஸ்தபா (எ) சதாம் என்பவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வகிதாபேகம் தற்போது தனது கணவரை பிரிந்து மேற்படி முகவரியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். வகிதாபேகம் நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் கொருக்குப்பேட்டையில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு துணிகளை எடுப்பதற்கு சென்ற போது, அங்கிருந்த முஸ்தபா (எ) சதாம் தனது மனைவி வகிதாபேகத்திடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் முஸ்தபா (எ) சதாம் வீ ட்டிலிருந்த கத்தியை எடுத்து வகிதாபேகத்தை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். காயமடைந்த வகிதாபேகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து H-4 கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.   H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட முஸ்தபா (எ) சதாம், வ/31, த/பெ.சாகுல்அமீது, எண்.173/33, மன்னப்பன்தெரு, கொருக்குப்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து  1கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முஸ்தபா (எ) சதாம், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »