கொடுங்கையூரில் கிரிக்கெட் விளையாட்டின் போது நண்பருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, நண்பரின் வீட்டிற்கு சென்று நண்பரையும், அவரது தாயையும் கல்லால் தாக்கிய 3 சகோதரர்கள் கைது.

சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த லோகேஷ், வ/27 என்பவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொடுங்கையூரில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் ஆடும் போது, லோகேஷ்க்கும் நரேஷ் பிரவீன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து சென்றனர். இந்நிலையில், லோகேஷ், அன்றைய தினம் இரவு கொடுங்கையூர் காமராஜர் சாலையில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது, மேற்படி நரேஷ் பிரவீன் மற்றும் அவரது சகோதரர்கள் லோகேஷ் பிரவீன், சதிஷ் பிரவீன் ஆகியோர் லோகேஷின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து, கை மற்றும் கல்லால் தாக்கினர். அப்பொழுது லோகேஷ் மற்றும் தடுக்க வந்த லோகேஷின் தாயார் கல்லடிப்பட்டு, இரத்தக் காயம் ஏற்பட்டது. உடனே 3 நபர்களும் தப்பிச் செல்லவே, காயமடைந்த லோகேஷ் மற்றும் தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மேற்படி சம்பவம் குறித்து கொடுத்த புகாரின் பேரில், P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 1.நரேஷ் பிரவீன், வ/24, த/பெ.மதி, கணபதிநகர் 3வது தெரு, மாதவரம் பால்பண்ணை, மாதவரம், இவரது சகோதரர்கள், 2.லோகேஷ் பிரவீன், வ/28, த/பெ.மதி, 3.சதிஷ் பிரவீன், வ/30, த/பெ.மதி ஆகிய மூவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 சகோதரர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »