கிண்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது. 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்திவருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ,அடையாறு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW/Adyar) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கிண்டி இரயில் நிலையம் அருகே கண்காணித்து, அங்கு நின்றிருந்த ஒரு நபரை விசாரணை செய்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின் பேரில், அவரை சோதனை செய்த போது, அவர் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அதன் பேரில் சட்ட விரோதமாக கஞ்சா மறைத்து வைத்திருந்த ஜெகன், வ/23, த/பெ. அம்பேத்கர், எண்.2218, கண்ணகி நகர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எதிரி ஜெகன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »