கிண்டி பகுதியில் கட்டுமான வேலை செய்து வரும் வடமாநில நபர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கிய நபர் கைது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஸ்வந்த் ரெட்டி, வ/21 மற்றும் ஹீனாசாகு, வ/34 ஆகியோர், கிண்டி, மடுவங்கரை, சக்கரபாணி ரோட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் இடத்தில் கட்டுமான வேலை செய்து, அங்கேயே தங்கி வருகின்றனர். இந்நிலையில், இருவரும் கடந்த 21.02.2022 அன்று இரவு மேற்படி இடத்தில் பேசிக் கொண்டிருந்த போது, ஹீனாசாகு கிண்டல் செய்ததால், பிஸ்வந்தரெட்டி ஹீனாசாகுவை கையால் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹீனாசாகு, அங்கிருந்த காய்கறி வெட்டும் சிறிய கத்தியால் பிஸ்வந்த் ரெட்டியை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் பிஸ்வந்த் ரெட்டியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததின் பேரில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேற்படி சம்பவம் குறித்து பிஸ்வந்த் ரெட்டி கொடுத்த புகாரின் பேரில், J-3 கிண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

J-3 கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ஹீனாசாகு, வ/34, த/பெ.பாபுசாகு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சிறிய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி ஹீனாசாகு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »