கள்ளிமந்தயம் ஊராட்சியில் கோவிசீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்….

ஒட்டன்சத்திரம் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆணைப்படி உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்   அர.சக்கரபாணி ஆலோசனைப்படி  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் உத்தரவுப்படி 100 சதவீத இலக்கை நோக்கி  தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் க.தங்கராஜ் தலைமையிலும், தொப்பம்பட்டி ஒன்றிய துணை பெருந்தலைவர் பி.சி.தங்கம்  முன்னிலையிலும் தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியம், கள்ளிமந்தையம்  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,  தொப்பக்காவலசு  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, காளியப்ப கவுண்டன்பட்டி போன்ற இடங்களில் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்  நடைபெற்றது.


 இம் முகாமின் போது உதவி ஆணையர் கலால் எஸ்.சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார். கள்ளிமந்தயம் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இம்முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கணேசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜேஷ், தொப்பம்பட்டி ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தி.ஆனந்தராஜ், ஊராட்சி  கிளை செயலாளர்  கோதண்டராமன், ஊராட்சி செயலர் ராஜாமணி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரன், தொப்பம்பட்டி கீரனூர் சுகாதார ஆய்வாளர் சுந்தரம், பாலு, சுகாதார செவிலியர்கள் ஜெயமணி, திவ்யபாரதி, ஜெயலட்சுமி, தமிழரசி, மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்கள்  பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »