கன்னியாகுமரியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக திரண்ட விவசாயிகள்….

கன்னியாகுமரி – மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 80 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

விவேகானந்தபுரம் சந்திப்பில் போராட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தோம். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் செந்தில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தடையை மீறி விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகள் 80 பேர் கைது

விவேகானந்தபுரம் சந்திப்பு முதல் காந்தி மண்டபம் வரை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் இதனால் முக்கடல் சங்கமிக்கும் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. மேலும் இதன் காரணமாக இந்த வழியாக வாகனங்களை போக்குவரத்திற்கு போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அப்பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட வந்த போராட்டக்குழு தலைவர் ஈசன் முருகசாமி. ஒருங்கிணைப்பாளர் குருசாமி. உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாஜகவினர் திரண்டனர்

இதற்கிடையே போராட்டம் குறித்து அறிந்த பாஜகவினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர் இதனை பாஜக பொறுப்பாளர் சுபாஷ் அவர்கள் தலைமையில் கோஷங்கள் எழுப்பப்பட்டது இதனால் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விவசாயிகள் கைது செய்யப்பட்டதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »