கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாட்டில் பயன்பாட்டிற்கு வராத நூலக கட்டிடம்

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் வேணி அம்மன் கோவில் முன்பு 2013- 2014ஆம் நிதியாண்டில் ரேஷன் கடை வளாகத்தில் இப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக நூலகம் கட்டப்பட்டு திறப்பு விழாவை கண்ட இக்கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. தற்போது நூலகம் வைகை ஆற்று படுகையில் இருக்கும் அரசு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அப்பகுதியில் பராமரிப்பின்றி பன்றிகள் அதிகம் நடமாடும் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் இருக்கும் கட்டிடத்தில் நடைபெறுவதால் மக்கள் யாரும் சென்று படிப்பதில்லை மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லாமல் பெயரளவில் நடைபெறுகின்றது. எப்போது திறக்கப்படுகிறது என்பது கூட பொதுமக்களுக்கு தெரியவில்லை. எனவே நூலகத்திற்கு என்று கட்டப்பட்ட இடத்தில் நூலகம் செயல்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி கிடைக்க வழிவகை செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »