கடமலை மயிலை ஒன்றியத்தில் நரேந்திர மோடிஜியின் 71 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர் அண்ணாநகர் மயிலாடும்பாறை தர்ம ராஜபுரம் வைகை நகர் வருசநாடு ஆகிய ஊர்களில் செப்டம்பர் 17 ல் பிறந்தநாள் காணும் பாரதத் தாயின் தவப்புதல்வர் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களை வாழ்த்தி அனைத்து ஊர்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இந்த பிறந்தநாள் விழாவில் மாயகிருஷ்ணன் மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் மணிகண்டன் தெற்கு ஒன்றிய தலைவர் கருப்பசாமி வடக்கு ஒன்றிய தலைவர் ஜெயபாண்டி தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் கேப்டன் தெற்கு  இளைஞரணி ஒன்றிய தலைவர் முருகன் இளைஞர் அணி ஒன்றிய பொதுச் செயலாளர் இணைத் தலைவர் லோகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டு வருகை தந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »