கடமலை மயிலை ஒன்றியத்தில் வியாபாரிகள் சங்க கூட்டம்…

வருஷநாடு – தங்கமாள்புரம் வியாபாரிகள் சங்கம்  முதல் மாதாந்திர கூட்டம் நேற்று ஓம் ப்ளஸ் மண்டபத்தில்  தலைவர் B.பால்பாண்டி தலைமையில் செயலாளர் K. கிருஷ்ணகுமார் மற்றும் பொருளாளர் B.கனியரசு முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் தேனி மாவட்ட தலைவர் Dr. R. காமராஜ் கடமலை-மயிலை ஒன்றிய தலைவர் மாஸ்டர் செல்வா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வியாபாரிகளில் முன்னேறம் தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு இடையூறு உண்டாக்கும் வகையில் பட்டாசு  வெடிக்கும், நடவடிக்கைகளை தடைசெய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஐடி கார்டு வழங்கப்பட்டது.

Dr. R. காமராஜ் Ph.D தேனி மாவட்ட தலைவர்,தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் சார்பாக வருகை தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து சங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைவரும் நடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »