ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்…

ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் நகராட்சியின் சார்பில் 18-வார்டுகளிலும் கொரோனா தடுப்பூசி 100% போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து வார்டுகளிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படியும் உணவு மற்றும் உணவு பொருள் பாதுகாப்பு துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவுரையின் பேரிலும் ஒட்டன்சத்திரம் திமுக  நகர செயலாளர்  வெள்ளைச்சாமி ஆலோசனைபடியும் 2- வது வார்டு ஏபி காலனி ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போடுவதற்கு  முகாம் அமைக்கப்பட்டது.  மேலும் 2 -வது வார்டு திமுக செயலாளர் ஏ பி காலனி என்.நாட்ராயன்  மற்றும் 2-வது வார்டு ஆதிதிராவிடர் நலக்குழு  நகர அமைப்பாளர்  கருணாநிதி  மற்றும் வார்டு பிரதிநிதிகள் சேகர் , சக்திவேல்,  ஆனந்த்  உள்ளிட்டோர் இம்முகாமை ஒருங்கிணைத்து வீடு வீடாக சென்று மக்களுக்கு அறிவுரை வழங்கி தடுப்பூசி முகாமிற்கு ஏராளமான மக்களை அழைத்து வந்து தடுப்பூசி  செலுத்தும் வகையில் சிறப்பான முறையில் பணியாற்றினார்கள். இம்முகாமில் ஆசிரியர்கள் , செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்னதாக இந்த சிறப்பு முகாமில் முதல் தவணை தடுப்பூசி  போட்டு கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »