ஒட்டன்சத்திரத்தில் தே.மு.தி.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மாவட்ட கழக அவைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசியதாவது,  வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வேட்பாளர்களை தேர்வு செய்து  நியமிக்க வேண்டும் என்றும் சிறப்பான களப்பணியாற்றி நாம் வாக்குகளை வாங்கி ஆக வேண்டும் என்று சூளுரைத்து  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகளுக்கு களப் பணியில் தொய்வு ஏற்படாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் எனவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெற்றிபெற வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

மேலும் அவர் கூறியதாவது எந்த காவல் நிலையங்களிலும் கட்டப்பஞ்சாயத்துகளுக்கு போகாத ஒரே கட்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெருமிதத்தோடு பேசினார். மேலும் தீபாவளியை முன்னிட்டு  இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் கார வகை தொகுப்பினை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களையும்மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

இதில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் J.L.சங்கர், தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் மாவட்ட தலைவர் பூபதிராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.வடிவேல், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, குஜிலியம்பாறை ஒன்றியசெயலாளர் திருமுருகன், தங்கராஜ், வேடசந்தூர் முருகன், சக்திவேல்,வடமதுரை பழனிவேல், பழனி களஞ்சியம், தொப்பம்பட்டி தேன் பழனிச்சாமி, பரமசிவம், ஒட்டன்சத்திரம் சண்முகவேல்,கொடைக்கானல் நகரச் செயலாளர் செந்தில், பழனி நகர செயலாளர் ஈஸ்வரன், நிகழ்ச்சியின் முடிவில் ஒட்டன்சத்திரம் நகரச் செயலாளர் சிக்கந்தர் நன்றி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »