உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை..

செங்கல்பட்டு – செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர மேற்கு ஒன்றியம் சார்பாக ஆப்பூர்,வெங்கடாபுரம், குருவன்மேடு ஆகிய பகுதிகளில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் அறிவுறுத்தலின்படி காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் செட்டிபுண்ணியம் சி.ஆர். குணசேகரன் ஏற்பாட்டில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை வழங்கி பேசினார்.

இந்தக் கூட்டத்தில் காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் செட்டிபுண்யம் சி.ஆர்.குணசேகரன் பேசியதாவது:  
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில்  நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு மாபெரும் வெற்றி கனியை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரனிடம் வெற்றிக்கனியை சமர்ப்பிப்போம் இவ்வாறு அவர் தெரிவித்தார் . 
இந்தக் கூட்டத்தில் ஒன்றியக் கழக துணைச் செயலாளர் வடகால் வ.பா.மாரிமுத்து, ஒன்றிய கழக பொருளாளர் U.K.P கபில் (எ)கமலக்கண்ணன், மாவட்ட மாணவரணி தலைவர் டி.பாலமுருகன், மாவட்ட பிரதிநிதிகள் திம்மாவரம் எஸ். நீலமேகம், மருத்துவர் ஜி.ஷக்கீர்பாஷா மற்றும் வில்லியம்பாக்கம் த.குமரன்,ஆப்பூர் சிவக்குமார், ஆத்தூர் சூர்யா, வெங்கடாபுரம் மோகன், திம்மாவரம் அன்பழகன்,பாலூர் வழக்கறிஞர் எஸ்.ஏ.சுதேஷ் ஆனந்த் உள்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »