ஆதம்பாக்கம் பகுதியில் இளஞ்சிறுமியை காதலிக்க சொல்லி தகராறு செய்த நபரை தட்டிக் கேட்ட வயதான பெண்மணியை கத்தியால் தாக்கி கொலை செய்த நபர் கைது.

சென்னை, புனிததோமையர் மலை காவல் மாவட்டத்தில் வசிக்கும் இளஞ்சிறுமியிடம் ஒருநபர் இரவு காதலிக்கும் படி வற்புறுத்தி தகராறு செய்துள்ளார். அப்பொழுது, ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர்நகர், 3வது தெருவில்வசிக்கும் வெள்ளாத்தா, பெ/வ.65, க/பெ.பாலய்யா என்பவர் அந்த நபரை ஏன் இப்படி தகராறு செய்து கொண்டிருக்கிறாய், போ என கூறியுள்ளார். உடனே, அந்த நபர் மேற்டி வயதான பெண்மணி வெள்ளாத்தாவிடம் தகராறு செய்து, வெள்ளாத்தாவை கத்தியால் தாக்கி இரத்தக் காயம் ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றார். இரத்தக் காயமடைந்த வெள்ளாத்தாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இது குறித்து வெள்ளாத்தாவின் மகன் கொடுத்த புகாரின் பேரில், S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை பிரிவில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 அதன் பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் (எ) விக்கி, வ/25, த/பெ.குமார், எண்.268, டாக்டர் அம்பேத்கர் நகர் 3வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.    

மேலும் விசாரணையில் எதிரி விக்னேஷ் (எ) விக்கி S-8 ஆதம்பாக்கம் காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் 14 திருட்டு வழக்குகள் உட்பட 16 குற்றவழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

 தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்குப் பின்னர் எதிரி விக்னேஷ் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »