ஆதம்பாக்கம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது.

சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் வசிக்கும் கவிதா, வ/25, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் இரவு வேலை முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கவிதாவை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஆதம்பாக்கம் கருனிகர் தெருவில் உள்ள லக்கி திருமண மண்டபம் அருகே மேற்படி கவிதாவை பின் தொடர்ந்து வழிமறித்து கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து கவிதா S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சந்திரஹாசன், வ/34, த/பெ.ஜான், எண்.7, ஆசிர்வாதபுரம்2வது தெரு, புளியந்தோப்பு, சென்னை, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்ற சம்பவத்தின் போது பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.  விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சந்திரஹாசன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »