ஆண்டிப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலையை இந்து முன்னணியினர் போலீஸ் பாதுகாப்புடன் வைகை ஆற்றில் கரைத்தனர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் எஸ்பிஎம் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராசு, ஆர் எஸ் எஸ் மாநில பொறுப்பாளர் கணேசன்,  பிஜேபி துணைத் தலைவர் குமார் ஆகியோர் முன்னிலையில் மினி லாரியில்கொண்டு சென்றுவைகை ஆற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி தெற்கு ஒன்றிய தலைவர் கனகராஜ், நகர செயலாளர் பகவதிராஜ்குமார், மனோஜ் குமார் உள்பட திரளான ஹிந்து முன்னணி பிஜேபி தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »