ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்…

ஆண்டிபட்டி – கடமலை மயிலை ஒன்றியத்தில் திமுக சார்பில்  வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி டி ஓ திருப்பதி முத்து ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமையில் 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் கருப்பசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த கூட்டத்தில் கடமலை மயிலை ஒன்றிய வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி ஒன்றிய கவுன்சிலர் மச்சக்காளை மற்றும் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதற்குமுன் 8வது வார்டு கவுன்சிலராக இருந்த தமிழ்ச்செல்வன் மரணமடைந்து விட்டார். அதற்காக இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »