ஆண்டிபட்டி கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…

ஆண்டிபட்டி – 16/09/2021 உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்பொழுது பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மணிஸ்வரன் தலைமை தாங்கினார். முதுகலைத் தமிழாசிரியர் செல்வம், கணினி ஆசிரியர் மகேந்திரன்,  பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரை வழங்கினர். ஓசோன் மண்டலம் பாதிப்பு குறித்தும், உலக வெப்பமயமாதல் குறித்தும், இயற்கையை பாதுகாப்பதில் நாம் ஒவ்வொருவரின் பங்கு இருப்பது பற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »