அலங்காநல்லூரில் அதிமுக 50ஆம் ஆண்டு பொன்விழா – தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அலங்காநல்லூர் – அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் அதிமுகவினர் கட்சியின் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  அ.புதுப்பட்டி கிராமத்தில் கிளை கழகம் சார்பாக இளைஞர் பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர் ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதேபோன்று வாவிடமருதூர் ஊராட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  எம்.வி.கருப்பையா தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிளை செயலாளர் பிச்சை பாண்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அலங்காநல்லூர் பேரூர் கழகம் சார்பில் சந்தைமேடு பகுதியில் நகர செயலாளர் அழகுராஜா தலைமையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது. இதில் நிர்வாகிகள் நாட்டாமை சுந்தர், சுந்தராகவன், கேட்டுக்கடை ஆறுமுகம், வெள்ளை கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »