அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாம்

விக்கிரவாண்டி – விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ள டீன் அழைப்பு . விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை டீன் குந்தவிதேவி வெளியிட்ட பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- தமிழக அரசு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தி , விழுப்புரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை வளாகத்தில்  இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தனி நபர் பாதுகாப்பு–தேசத்தின் பாதுகாப்பு என்கிற வகையில் இது வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முதல் தவணை தடுப்பூசியும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் தவணை தவறாமல் முகாமில் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கல்லுாரி டீன் குந்தவி தேவி தெரிவித்துள்ளார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »