அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர்க்கு மதுரை வாடிப்பட்டியில் வெற்றிலை மாலை அணிவித்து எழுச்சிமிகு வரவேற்ப்பு..

சமிபத்தில் நடந்த அதிமுக கட்சியின் ஒருங்கினைப்பாளர் மற்றும் துணை ஒருங்கினைப்பாளர் தேர்தலில் போட்டியின்றி அதிமுக கழக ஒருங்கினைப்பாளர்ராக ஒ.பன்னிர்செல்வம் மற்றும் துணை ஒருங்கினைப்பாளர்ராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர், தேர்ந்தெடுக்கப்பட்ட கழக ஒருங்கினைப்பாளர் பன்னீர் செல்வம் தேனியில் உள்ள அவர் இல்லத்திற்க்கு செல்லும் வழியில், கழக ஒருங்கினைப்பாளர்க்கு 
மதுரை  வாடிப்பட்டியில் மதுரை மேற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெற்றிலை மாலை அணிவித்து எழுச்சி மிகு வரவேற்ப்பு அளித்தார்.

இந்நிகழ்வில் உசிலம்ப் பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கருப்பையா,தமிழரசன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் காளிதாஸ், கொரியர் கணேசன்,  ரவிச்சந்திரன், முருகேசன், அன்பழகன், ராமசாமி  மகாலிங்கம்,ராஜா, மாநில அம்மா பேரவை துணை செயளாலர்கள் வெற்றிவேல், தனராஜன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »