அண்ணாநகர் பகுதியில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது. 6 பெண்கள் மீட்பு.

சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மேற்படி குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவிட்டதன் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்கள் கைது செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, K-4 அண்ணாநகர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்குழுவினர் நேற்று அண்ணாநகர்,  3வது அவென்யூவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டு,மேற்படி இடத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய கார்த்திக் ராஜா, வ/27, த/பெ.ஜோதிலிங்கம், எண்.68 ஏ, மாதாநகர், காவாங்கரை, புழல், சென்னை என்பவரை கைது செய்தனர். மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 6 பெண்கள் மீட்கப்பட்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகியுள்ள மணி என்பவரை போலீசாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட கார்த்திக் ராஜா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். மீட்கப்பட்ட 6 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »