அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி …

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார் .
விக்கிரவாண்டியை சேர்ந்தவர் ரஹ்மான்,37: ஓட்டலில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 9 ம்தேதி காலை 9 மணியளவில் பேரூராட்சி அலுவலகம் எதிரே பைபாஸ் சாலையை கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார்.
அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு இறந்தார் .  இது பற்றிய புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ்  இன்ஸ்பெக்டர் வினாயக முருகன்  வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »